ஆப்கானிஸ்தானின் தாலிபான் படையினர் நடத்திய தாக்குதல்களில் 12 வீரர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 27 வீரர்கள் காயம் அடைந்ததாகவும், ஒருவரை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஆப்கானில் உள்ள 22 ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமானப்படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் நகரங்கள் மீது தாலிபான் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.