டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. இது உறுதியானால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ICC ரூ.300 கோடி அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருவாயைத் தடுத்து நிறுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.