பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ரஷ்யா, வட கொரியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் மறைமுகமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன. ஆகையால்தான், அமெரிக்காவும் அணு ஆயுத சோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது" என கூறியுள்ளார். அவரின் இந்த தகவல் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.