ஜம்மு மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் இருந்து பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கப்படும் நானோ ட்ரோனை மீட்டனர். வியாழக்கிழமை இரவு ஆர்.எஸ். புரா செக்டரின் சக்ரோய் பகுதியில் இந்த டிரோன் கிடப்பதை உள்ளூர்வாசி ஒருவர் தகவல் அளித்ததை அடுத்து, வீரர்கள்
விரைந்து சென்று மீட்டனர். ட்ரோனின் தோற்றம், நோக்கம் மற்றும் எல்லை தாண்டிய இணைப்புகளை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு அல்லது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இது பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.