இத்தாலி
பிரதமர் மெலோனிக்கு
பிரதமர் மோடி மெலடி சாக்லேட் பரிசளித்ததைத் தொடர்ந்து, 'பார்லே இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனப் பங்குகள் கணிசமாக உயர்ந்தன. மெலடி சாக்லேட்டை 'பார்லே புராடக்ட்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் குழப்பமடைந்து பார்லே இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கியுள்ளனர். அந்த நிறுவனத்திற்கும் மெலடி சாக்லேட்டிற்கும் நேரடி வணிகத் தொடர்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.