பெரம்பலூர் மாவட்டத்தில், ஏரி மற்றும் ஆற்றுப் பாசனம் விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில், விவசாயிகள் பலர் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மக்காச்சோளத்திற்கு உரிய விலை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மக்காச்சோளக் கதிர்களை கையில் ஏந்தி தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.