திருச்சி ராம்ஜி நகர் திருநகர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் தனது குடும்பத்துடன் கட்டளை வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அவரது ஏழு வயது மகள் அக்சிதா நீரில் மூழ்கி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து ராம்ஜி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.