பெரம்பலூர் மாவட்டத்தில் இடைநிலை மற்றும் மேல்நிலை அரசுப் பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். தேர்வுகளைச் சிறப்பாக நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.