தன்னம்பிக்கை, படிப்பு, விளையாட்டு, பொது அறிவு, கலை உள்ளிட்ட திறன்களை வளர்க்கும் நோக்கில் "Coffee With Collector" என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி இன்று (07.11.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். உயர் கல்வி, போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களை அகற்றி, விடாமுயற்சி, கடின உழைப்பால் எதையும் சாதிக்கலாம் என வழிகாட்டினார். இந்நிகழ்ச்சியில் 50 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.