பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தத்தில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் குழந்தை திருமணத்தின் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.