பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று (19.08.2025) திடீர் ஆய்வு மேற்கொண்டார். உள் நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அவர், நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை முறைகள் திருப்திகரமாக உள்ளதா என கேட்டறிந்தார். விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்பு மையத்திலும் ஆய்வு செய்தார்.