பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சி திமுக சார்பில், திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், அரும்பாவூர் பேரூர் திமுக செயலாளர் எம்.ஆர். ரவிச்சந்திரன் தலைமையில், ஒன்றிய பிரதிநிதி டி. மதிவாணன் வரவேற்புரையில், அரும்பாவூர் கலைஞர் திடலில் நடைபெற்றது. வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ். நல்லதம்பி, பேரூர் அவைத்தலைவர் ஆர். மணி, அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் வள்ளியம்மாள் ரவிச்சந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் எஸ். சரண்யா குமாரன், பேரூர் துணைச் செயலாளர்கள் ஆர். குணசேகரன், அ. பார்வதி, மாவட்ட பிரதிநிதிகள் சீ. ஈஸ்வரன், சி.எல். ராஜேந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் ஆர். பூசாமுத்து, அ. பாண்டியன், என். முருகேசன், எஸ். செந்தில்குமார், பேரூர் கழக பொருளாளர் எம். அழகேசன், பேரூர் மகளிர் அணி அமைப்பாளர் எல். இந்திராணி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் க. ஜெகதீசன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் எஸ். சுதாகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் - கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கரூர். முரளி கலந்து கொண்டு, தி.மு.க.வின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.