பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட, மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மே - 13ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள், குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர், அசோக் குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.