பெரம்பலூர் மாவட்ட பொறியாளர் அணிக்கான ஒன்றிய, நகர, பேரூர் திமுக நிர்வாகிகளுக்கு நேர்காணல் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் தகவல். பெரம்பலூர் மாவட்ட பொறியாளர் அணிக்கான ஒன்றிய, நகர, பேரூர் திமுக நிர்வாகிகளுக்கு நேர்காணல் வருகிற 17.04.2025 அன்று நடைபெறுகிறது.
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையின்படி, கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா. எம்.பி., ஆணைக்கினங்க, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆலோசனையின் பேரில், மாநில பொறியாளர் அணி செயலாளர் எஸ்.கே.பி. கருணா வழிகாட்டுதலின்படியும், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளரும்- மண்டல பொறுப்பாளருமான இரா.ப. பரமேஷ்குமார் தலைமையிலும், பெரம்பலூர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் முன்னிலையிலும், ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறியாளர் அணி பொறுப்புகளுக்கு 17.04.2025 (வியாழக்கிழமை), காலை 10.00 மணியளவில், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் மாநில பொறியாளர் அணி செயலியில் பதிவு செய்தவர்கள் மேற்கண்ட நேர்காணலில் பங்கேற்கும்படியும், கழக நிர்வாகிகளும் பங்கேற்கும்படியும் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.