பெரம்பலூர்: குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

52பார்த்தது
பெரம்பலூர்: குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்
அதன்படி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் சரகத்திற்குட்பட்ட பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் எளம்பலூர் கிராமத்தில் மகேந்திரன் என்பவர் எளம்பலூர் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர் மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து மொத்தம் – 12. 945 கிலோகிராம் எடையுள்ள 19, 200 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பெரம்பலூர் காவல்நிலைய காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி