பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் சுமார் 277 நபர்களுக்கு, 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 3-ம் கட்டமாக இலவச வீட்டுமனைப் பட்டாக்களை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் வழங்கினார்.