கலை பண்பாட்டுத் துறையின் திருச்சிராப்பள்ளி மண்டலம் சார்பாக, பெரம்பலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் (குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம்) 29.11.2025 அன்று காலை 9 மணி முதல் பெரம்பலூர் மதன கோபாலபுரம் 4-வது குறுக்குத் தெருவில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை 9659507773 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.