பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் பெரம்பலூர் நகரத்தின் பல்வேறு பகுதிகளான புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், துறைமங்கலம், கே. கே. நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அரியலூர் மெயின்ரோடு, மின்நகர், 4-ரோடு, எளம்பலூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, எளம்பலூர் இந்திரா நகர், அருமடல், சமத்துவபுரம், வடக்கு மாதவி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.