பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (25.05.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து மொத்தம் 386 மனுக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். அரசு துறை அலுவலர்கள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.