பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டனர். சிறப்பு மனு முகாம் மூலம் மொத்தம் 14 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.