பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் இன்று சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்ற காவல் கண்காணிப்பாளர், பெறப்பட்ட 19 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தார்.