பெரம்பலூரில் இருந்து பெருமத்தூர் கிளியூர் வரை செல்லும் அரசு பேருந்து, வ. அகரம் கிராமம் வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், கிளியூர் கிராமத்தில் வழித்தடம் நீட்டிப்பால் பேருந்து தாமதமாக வந்ததால், பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.