பெரம்பலூர் மாவட்டத்தில், மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை முகாம் (நவீன வாசக்டமி) இரு வாரங்களாக 04.12.2025 வரை நடைபெறுகிறது. கருத்தடை மற்றும் அதன் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் இன்று (02.12.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.