பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 12 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ. 5,049 மதிப்பீட்டில் மொத்தம் ரூ. 60,588 மதிப்பிலான செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.