பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி தலைமையில் (18. 5. 2026) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார்.