தவெக தலைவர் விஜய், வரும் 12ஆம் தேதி கன்னியாகுமரியில் பரப்புரை மேற்கொள்ளவுள்ள நிலையில் காவல்துறை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடக்கும் பரப்புரையில் விஜய் பங்கேற்கிறார். தேர்தல் ஆணைய 6 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது. 5 ஆயிரம் பேர் வரை அனுமதிக்க வேண்டும் என தவெக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.