ஈரான் போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திக வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே எரிபொருள்களை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்த பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் பீதியடைந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி “பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதுமான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் அச்சப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளது.