சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிப்பதற்கான காகிதத்தாள் கட்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் கென்னடிக் கண்ணன் என்பவர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், நிறுவனத்தின் ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டுகளை வீசியதில், நிறுவனத்தின் உரிமையாளர் கென்னடி பலத்த காயமடைந்துள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.