கேரள சட்டமன்றத் தேர்தலையொட்டி இன்று (ஏப்., 09) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்த நிலையில், கண்ணூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கினை பதிவு செய்தார். அதே போல், திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் மோகன்லால் தனது வாக்கை பதிவு செய்தார். திருச்சூரில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி ஜனநாயக கடமையாற்றினார்.