தமிழ்நாடு முதலமைச்சர்
விஜய், இன்று (மே 27) டெல்லியில்
பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, பிரதமருக்கு பொன்னாடை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். முதலமைச்சராக
விஜய் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் சந்திப்பில், தமிழ்நாட்டின் முக்கிய திட்டங்கள் குறித்த கடிதத்தை பிரதமரிடம் வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.