டெல்லியில், மத்திய அரசின் ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தின் 18-வது தவணையாக, சுமார் 61,000 பேருக்கு அரசு பணிகளுக்கான நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று (ஜன.24) காணொலி காட்சி வாயிலாக வழங்கினார். நாடு முழுவதும் 45 இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வர்த்தக ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றும், வளர்ந்த இந்தியாவை உருவாக்க உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.