ராமநாதபுரம்: ராமேஸ்வரம் சேரங்கோட்டையில் 12ஆம் வகுப்பு மாணவி குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. மாணவியை முனிராஜ் என்ற இளைஞர் ஒருதலை காதல் விவகாரத்தில் இன்று (நவ., 19) கொலை செய்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கொலையாளியை தங்களிடம் ஒப்படைக்கக்கூறி மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.