தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் வரும் 13ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த போலீசார் அனுமதியளித்துள்ளனர். மேலும், மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கட்சியினர் 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு உரிய பாஸ் வழங்க வேண்டும், கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் யாரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிபந்தனைகளோடு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.