திண்டுக்கல் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விக்னேஸ்வரன் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற நிலையில், காலில் சுட்டுப்பிடித்தனர். தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.