“அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை” - செல்வப்பெருந்தகை கண்டனம்

6279பார்த்தது
“அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை” - செல்வப்பெருந்தகை கண்டனம்
திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “அமைச்சர் ஐ.பெரியசாமி சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பாஜக அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை” என்றார்.

தொடர்புடைய செய்தி