தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்குவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.6,687 கோடியை ஒதுக்கி இருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ.3,000 பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.