அரபிக் கடலில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 17 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியும், அதனைத் தொடர்ந்து 24 ஆம் தேதி வாக்கில் தெற்கு அரபிக் கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.