சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடுமையாக அவதியடைந்துள்ளனர். சென்னை விம்கோ நகர், பாரதியார் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேற்றிரவு (மே 20) மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகில் இருந்த மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.