நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த சம்பவத்தில், அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதாக நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, அவர் சிறையிலேயே அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி, குற்றச்சாட்டிற்குரிய காவலர்களை கைது செய்யும் வரை உடலை பெறப்போவதில்லை என அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.