தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹாஜா மொகைதீன் (38) என்பவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனிலில் வெளியே வந்த அப்துல் பாசித் என்பவர் கும்பலாக சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
