வேலூர் மாவட்டம் கணியம்பாடி பேருந்து நிலையம் முன்பு, செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக தவெக நிர்வாகி விஜயகுமாரை கண்டித்து இன்று (மே 25) கண்டன
போராட்டம் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட தவெக நிர்வாகி மீது காவல் துறையினர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி:PT