காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், காரைக்கால் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்படா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல் செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் PMMSY திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகள், மானிய விபரங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.