காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் அரையாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகாலை முதலே பல்வேறு வெளிமாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கான சனிபகவானை தரிசனம் செய்ய வருகை தந்தனர். முன்னதாக திருநள்ளாறின் புனித தீர்த்தமான நள தீர்த்த குளத்தில் புனித நீராடி பின்னர் சனிபகவானை வழிபட்டனர்.