காரைக்கால்: வீரமாகாளிம்மன் ஆலயத்தில் பால்குட அபிஷேக நிகழ்ச்சி

71பார்த்தது
காரைக்காலை அடுத்த வடமறைக்காடு பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் வைகாசி மகோத்சவ பெருவிழா கடந்த 27ஆம் தேதி பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி முன்னிட்டு ஸ்ரீ வீரமாகாளியம்மனுக்கு பால்குட அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you