புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பையொட்டி தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றாக புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுச்சேரி திரும்பும் "சாகர் சங்க்ரம்" பாய்மரப் படகு கடல் சாகச பயணத் தொடக்க விழா தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இன்று நடைபெற்றது. இந்த பயணத்தினை முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.