பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கிணங்க, வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தே மாதரம் முழு பாடலை பாடினர். இது பாஜக தேசிய தலைமையின் அறிவுறுத்தலின்படியும், மாநில தலைவர் திரு. வி. பி. ராமலிங்கம் வழிகாட்டுதலின்படியும் ஏற்பாடு செய்யப்பட்டது.