அதிமுக மாநில கழக செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ கே டி ஆறுமுகம், திருமுருகன் மற்றும் முதலமைச்சரின் நேர்முக உதவியாளர் சுந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.