கடலோர பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக பங்களிப்பை மேம்படுத்தும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) ஜனவரி 28 முதல் பிப்ரவரி 22 வரை 'வந்தே பாரதம் கடலோர சைக்ளோதான்' என்ற விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளது. 25 நாட்கள் நடைபெறும் இந்தப் பயணத்தில் 64 வீரர்கள் (33 பெண்கள், 31 ஆண்கள்) 6553 கிலோமீட்டர் தூரம் பயணிக்கின்றனர். புதுச்சேரி வந்த அவர்கள், கடற்கரை காந்தி சிலை அருகே இருந்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.