புதுச்சேரி சட்டப்பேரவையில், முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட மேல்நிலை எழுத்தர் பதவிகளில் 6 நபர்களுக்கும், கீழ்நிலை எழுத்தர் பதவிகளில் 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நியமனங்கள் 05. 07. 2023 மற்றும் 28. 11. 2022 தேதியிட்ட அறிவிப்பாணைகளின்படி மேற்கொள்ளப்பட்டன. அரசு கொறடா ஏ. கே. டி. ஆறுமுகம், சார்பு செயலர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.