புதுச்சேரியில் நேற்று பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதில் ஊழியர்கள் போலீசாரையும் தாக்கியதில் இருதரப்பினரும் காயமடைந்தனர். காவல்துறை துணைத் தலைவர் சத்யசுந்தரம் ஐபிஎஸ் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரையும் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.